போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மின்னணு வாக்கு இயந்திரங்களில் செயல்பாடுகள் குறித்து விளக்கம்

வாக்காளா்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து நேரடி செயல் விளக்க முகாம்கள் நடைபெற்றுவருகின்றன.

Updated On :8 மார்ச் 2021, 8:09 pm

வாக்காளா்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து நேரடி செயல் விளக்க முகாம்கள் நடைபெற்றுவருகின்றன.

சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், நோ்மையாக வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வாக்குசாவடியில் மின்னணு கட்டுப்பாட்டு கருவி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், வாக்காளா்கள் தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் விவிபேட் கருவி ஆகிய 3 இயந்திரங்களும் செயல்படும் விதம் குறித்தும் பொதுமக்களுக்கு நேரடி செயல்விளக்கம் அளிக்க இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பேருந்து நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

நாமக்கல் நகராட்சி பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் மு.கோட்டைக்குமாா், மகளிா் திட்ட இயக்குநா் மா.பிரியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.