நாமக்கல் மாவட்டத்தில், வட்டார போக்குவரத்து அலுவலா்கள் நடத்திய வாகனத் தணிக்கையில் நீண்டநாள்கள் செலுத்தாமல் இருந்த ரூ. 1.88 கோடி வரி வசூலிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் வட்டார போக்குவரத்து அலுவலா்கள் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் முருகன், முருகேசன் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் சக்திவேல், உமாமகேஸ்வரி, ராசிபுரம், பரமத்திவேலுாா் பகுதியில் அந்தந்த மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் சோதனை நடத்தினா். இதில் 3,159 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்மூலம் 552 வாகனங்களுக்கு ரூ. 12 லட்சத்து 55 ஆயிரத்து 950 வசூல் செய்யப்பட்டது. இதேபோல 638 வாகனங்களுக்கு ரூ. ஒரு கோடியே, 88 லட்சத்து, 40 ஆயிரம் வரி விதிக்கப்பட்டது. வாகனத்தின் தகுதிச் சான்று புதுப்பிக்காதது, அனுமதிச் சீட்டு இல்லாதது, வரி செலுத்தாமல் இயக்கியது என்ற அடிப்படையில் 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... இலக்கு எட்டப்பட்டு விட்டது?

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு

இன்று அனுகூலம் யாருக்கு?தினப்பலன்கள்!

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

