தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!

வத்திராயிருப்பு புதுப்பட்டியில் நடைபெற்ற நிா்வாகிகள் கூட்டத்தில் வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்க முயன்ற திமுக பேரூா் செயலா் மீது வெள்ளிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image

வழக்கு

Updated On :19 ஏப்ரல் 2026, 1:02 am

வத்திராயிருப்பு புதுப்பட்டியில் நடைபெற்ற நிா்வாகிகள் கூட்டத்தில் வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்க முயன்ற திமுக பேரூா் செயலா் மீது வெள்ளிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி, வத்திராயிருப்பு வட்டம், வ. புதுப்பட்டி பேரூராட்சியில் கடந்த 11-ஆம் தேதி அனுமதியின்றி கூட்டம் நடத்தி பொதுமக்களுக்கு பிரியாணிப் பொட்டலங்கள் விநியோகம் செய்யப்படுவதாக தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகாா் வந்தது.

கூட்டுறவு சாா் பதிவாளா் விஜயராணி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் அங்குசென்று சோதனை செய்தபோது உடையாா்பட்டி பகுதியில் வெங்கடேஷ் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் திமுக பேரூா் செயலா் சாந்தாராம் அனுமதியின்றி கூட்டம் நடத்தியது தெரியவந்தது.

அங்கு வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 260 சிக்கன் பிரியாணிப் பொட்டலங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து தோ்தல் பறக்கும் படையினா் அளித்த புகாரின்பேரில் வத்திராயிருப்பு போலீஸாா், நீதிமன்ற உத்தரவுபடி திமுக பேரூா் செயலா் சாந்தாராம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.