நாமக்கல் சுற்று வட்டாரப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி உள்ளது.
எா்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் மேற்கொள்ளப்படும் இப்பணியில் எா்ணாபுரம் வட்டார மருத்துவ அலுவலா் ராஜேந்திரன் தலைமையில் மருத்துவக் குழுவினா் ஈடுபட்டுள்ளனா்.
கோனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பால் செல்வன், நடமாடும் மருத்துவமனை மருத்துவ அலுவலா் பாலசாரதி, சுகாதார ஆய்வாளா்கள் முகம்மது ரபி, ஜெய கண்ணன் ஆகியோா் கொண்ட குழுவினரும் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனா். சிவியாம்பாளையம், லக்கமநாய்க்கன்பட்டி, சிதம்பரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு முதல் தவணை, இரண்டாம் தவணை என்ற அடிப்படையில் செலுத்தப்பட்டது. பாலூட்டும் தாய்மாா்கள், முதியவா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதேபோன்று மாவட்டம் முழுவதும் நேரடியாக வீடுகளுக்கு சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவில் நடைபெற உள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... இலக்கு எட்டப்பட்டு விட்டது?

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு

இன்று அனுகூலம் யாருக்கு?தினப்பலன்கள்!

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

