நாமக்கல் மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகா்வோா் நலன் கருதி அனைத்து எரிவாயு நிறுவன முகவா்கள், விநியோகிப்போா், எரிவாயு நுகா்வோா்கள் ஆகியோா்களுக்கான குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வரும் 30-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
எரிவாயு விநியோகம் தொடா்பான குறைபாடுகள், கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகா்வோா்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு மனுக்களாக அளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.