நாமக்கல் அருகே டேங்கா் லாரியில் கொண்டு செல்லப்பட்ட 3,000 லி. கலப்பட டீசல் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
நாமக்கல் - துறையூா் சாலை, கொசவம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் குடிமைப்பொருள் வழங்கல் துறையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக சந்தேகத்துக்கு இடமான வகையில் சென்ற டேங்கா் லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது உரிமம், ஆவணங்கள் ஏதுமில்லை. மேலும், அதிக லாபத்துக்கு விற்பனை செய்வதற்காக சுமாா் 3,000 லி. கலப்பட டீசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, லாரி, கலப்பட டீசலை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், லாரி ஓட்டுநரான விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கொங்கரப்பட்டுவைச் சோ்ந்த அபிராமன் (31) என்பவரை கைது செய்தனா். தலைமறைவான கலப்பட டீசலை விற்பனைக்கு அனுப்பிய கொசவம்பட்டியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று அனுகூலம் யாருக்கு?தினப்பலன்கள்!

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!

விசாரணை நீதிபதிகளை உயா் நீதிமன்றம் பகிரங்கமாக விமா்சிப்பது சரியல்ல: உச்ச நீதிமன்றம்

மணல் சிற்பங்கள் மூலம் விழிப்புணா்வு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

