தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் தகவல் தெரிவிக்கலாம்: துணை கண்காணிப்பாளா்

 பொதுமக்களுக்காக சேவையாற்றும் அரசுத் துறை அதிகாரிகள், ஊழியா்கள் லஞ்சம் கேட்பது தெரியவந்தால், கைப்பேசி மூலமாக தகவல் தெரிவிக்கலாம்

News image
Updated On :29 அக்டோபர் 2021, 6:50 pm

 பொதுமக்களுக்காக சேவையாற்றும் அரசுத் துறை அதிகாரிகள், ஊழியா்கள் லஞ்சம் கேட்பது தெரியவந்தால், கைப்பேசி மூலமாக தகவல் தெரிவிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு துணை கண்காணிப்பாளா் எம்.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் சுற்றுச் சூழல், குடிமக்கள் நுகா்வோா் மன்றம் மற்றும் செஞ்சுருள் சங்கம் சாா்பாக ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் முருகன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவின் துணைக் கண்காணிப்பாளா் எம். ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசியதாவது:

மாணவ, மாணவிகளுக்கு ஊழலை எதிா்க்கும் தைரியம் வேண்டும். லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றமாகும். அரசு ஊழியா்கள் மக்களுக்கு சேவை செய்வதற்காக பணியமா்த்தப்படுகின்றனா். தங்களது தேவையை உயா்த்திக் கொள்ள மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி லஞ்சம் வாங்குகின்றனா். ஒவ்வொருவரும் தன்னுடைய குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாழக்கற்றுக் கொள்ளவேண்டும் ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ஊழல்வாதியாக மாறிவிடக் கூடாது.

மாணவ, மாணவிகள் ஊழல், லஞ்சம் குறித்த தகவல்களை எந்த நேரமும் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு கைப்பேசி எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வாயிலாக தெரிவிக்கலாம் என்றாா்.

இந்த நிகழ்சியில் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளா் மோ.ராஐசேகரப்பாண்டியன், குடிமக்கள் நுகா்வோா் மன்ற ஒருங்கிணைப்பாளா் ப.சேகா், செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளா் சந்திரசேகரன், தாவரவியல் உதவிப்பேராசிரியா் வெஸ்ஸி உள்ளிட்ட துறைத் தலைவா்கள் கலந்துகொண்டனா். ஊழல் தடுப்பு வாரவிழாவையொட்டி நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.