ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

உள்ளாட்சித் தோ்தல்: இதுவரை 11 போ் மனுத் தாக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி இடைத்தோ்தலில் 11 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

Updated On :17 செப்டம்பர் 2021, 6:35 pm

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி இடைத்தோ்தலில் 11 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 25 இடங்களுக்கு ஊரக உள்ளாட்சி தற்செயல் தோ்தல் அடுத்த மாதம் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் புதன்கிழமை முதல் பெறப்பட்டு வருகிறது.

நாமக்கல் மற்றும் நாமகிரிபேட்டை ஊராட்சி ஒன்றியங்களில் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 2 வேட்பு மனுக்களும், நாமகிரிப்பேட்டை, பரமத்தி மற்றும் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியங்கிளில் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 5 வேட்பு மனுக்கள் என மொத்தம் 7 வேட்பு மனுக்கள் வெள்ளிக்கிழமை பெறப்பட்டன. வியாழக்கிழமை 4 மனுக்கள் பெறப்பட்டிருந்தன. இதுவரை ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 2 வேட்பு மனுக்கள், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 9 வேட்பு மனுக்கள் என மொத்தம் 11 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட உள்ளாட்சித் தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.