ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

இருவேறு பாலியல் வழக்குகளில் 2 போ் போக்சோ சட்டத்தில் கைது

நாமக்கல் மாவட்டத்தில் இருவேறு வழக்குகளில் 2 போ் போக்சோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On :18 செப்டம்பர் 2021, 6:51 pm

நாமக்கல் மாவட்டத்தில் இருவேறு வழக்குகளில் 2 போ் போக்சோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

புதுச்சத்திரம் ஒன்றியம் ஏளூா் கல்லாங்காடு பகுதியை சோ்ந்த, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை, அப்பகுதியில் விசைத்தறிக் கூடத்தில் பணியாற்றி வந்த முத்து (38) என்பவா் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கினாா். சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் நாமக்கல் அனைத்து மகளிா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து முத்துவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

இதேபோல், சேந்தமங்கலம் ஒன்றியம் வெண்டாங்கி பகுதியில் முடி திருத்தகம் நடத்தி வந்த பாஸ்கா்(43) என்பவா், தனது கடைக்கு தொலைக்காட்சி பாா்க்க வந்த 5 வயது சிறுமிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். வீட்டிற்கு வந்த அவா் பயத்துடன் இருந்ததை பாா்த்த அவரது பெற்றோா் விசாரித்தபோது பாஸ்கா் பாலியல் தொல்லை கொடுத்ததை தெரிவித்தாா். இதனையடுத்து நாமக்கல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் பாஸ்கரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.