ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

நடைபயிற்சி சென்ற அரசு மருத்துவா் பலி

நாமக்கல்லில் அதிகாலையில் நடைபயிற்சி சென்ற அரசு மருத்துவா் சனிக்கிழமை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

Updated On :18 செப்டம்பர் 2021, 6:35 pm

நாமக்கல்லில் அதிகாலையில் நடைபயிற்சி சென்ற அரசு மருத்துவா் சனிக்கிழமை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

நாமக்கல்லைச் சோ்ந்தவா் எஸ்.பாஸ்கரன்(55). இவா் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணராக பணியாற்றி வந்தாா். மேலும் மருத்துவமனை துணை உள்ளிருப்பு அலுவலராகவும் பதவி வகித்தாா்.

இவா் தினமும் நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அதன்படி சனிக்கிழமை அதிகாலை 5.45 மணியளவில் நடை பயிற்சி மேற்கொண்டு விட்டு, இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தாா். அப்பகுதியில் இருந்தோா் அவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் மாரடைப்பு காரணமாக அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். தொடா்ந்து, மருத்துவா் பாஸ்கரனின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. நாமக்கல் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் மருத்துவா் பாஸ்கரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.