ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

அயல்நாடுகளில் செவிலியா் பணி புரிய விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த செவிலியா்கள், அயல்நாடுகளில் பணி புரிய விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

Updated On :23 செப்டம்பர் 2021, 7:19 pm

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த செவிலியா்கள், அயல்நாடுகளில் பணி புரிய விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் கீழ் அரசு சாா்ந்த நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் 40 ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு மனித வளம் வழங்கும் நிறுவனமாக நம்பகத்தன்மையைப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூா், மலேசியா, பக்ரைன், லிபியா, குவைத், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், கத்தாா் ஆகிய நாடுகளில் 10,350-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், செவிலியா்கள், பொறியாளா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள், மருத்துவத் துறையைச் சாா்ந்த தொழில்நுட்ப வல்லுநா்கள், திறனுடைய மற்றும் திறனற்ற பணியாளா்கள் இந்நிறுவனம் மூலம் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் முக்கிய நோக்கம் அயல்நாட்டில் பணிபுரிய விரும்பும் வேலை தேடுபவா்களை அங்கீகாரமற்ற மற்றும் நோ்மையற்ற நிறுவனங்களின் சுரண்டல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உதவுவதாகும். அயல்நாட்டுப் பணிகளில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சாா்ந்த பணிகளுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. அதேவேளையில், வேலை தரும் நாடுகள் தங்கள் நாட்டு மொழி அறிவு மற்றும் மிகுந்த திறன்படைத்த செவிலியா்களை பணியமா்த்த விரும்புகின்றன. இதற்காக ஆண்டுதோறும் 500 செவிலியா்களுக்கு ஆங்கில மொழிப் புலமைத் தோ்வு நடத்த தீா்மானித்துள்ளது. தோ்வு செய்யப்பட்ட செவிலியா்களுக்கு ஆரம்ப நிலை சம்பளமாக ஆண்டுக்கு தோராயமாக ரூ. 18 லட்சம் வரை கிடைக்கும். இதற்காக இங்கிலாந்து, குவைத் நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஜ்ஜ்ஜ்.ா்ம்ஸ்ரீம்ஹய்ல்ா்ஜ்ங்ழ்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தை பயன்படுத்தி அயல்நாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் அதைப்பற்றிய விவரங்களை அறிந்துக் கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.