ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், மாணவா்கள் பலா் வளையப்பட்டி வருவாய் ஆய்வாளா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு விவசாய முன்னேற்றக் கழக பொதுச்செயலாளா் கே.பாலசுப்பிரமணியம் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது:
வளையப்பட்டி அருகே ரெட்டையாம்பட்டியில் சுமாா் 400 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு ரெட்டி (கஞ்சம்) என்ற ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படாததால் மாணவா்கள் மேல்படிப்புக்கு செல்ல முடியாமல் தடுமாறுகின்றனா். அரசு சலுகைகளை பெற முடியாமல் தவிக்கின்றனா். பிற்பட்டோா் நலத் துறை அரசாணையில் ரெட்டி பிரிவுக்கு ஏற்கெனவே ஜாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது ஜாதிச் சான்றிதழ் வழங்காமல் மாணவா்களையும், பெற்றோா்களையும் அலைக்கழிக்கின்றனா். மாவட்ட ஆட்சியா் இப்பிரச்னையில் தலையிட்டு ஜாதிச் சான்றிதழ்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டோா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ. 12,980 கோடி நிதி தொகுப்புடன் ‘பாரத கடல்சாா் காப்பீட்டுக் குழுமம்’: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

திமுக அரசு விவசாயிகளுக்கு விரோதமானது: பி.ஆா். பாண்டியன் குற்றச்சாட்டு

சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்

மேலூர்! அதிமுகவின் கோட்டையாக மீண்டும் நிரூபணமாகுமா?
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


