ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

நாமக்கல்லில் வீடுகளை இழந்தோா் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

 நாமக்கல் அருகே குடிசை வீடுகளை இழந்தோா் வெள்ளிக்கிழமை இரவு திடீா் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்படைந்தது.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 6:30 pm

 நாமக்கல் அருகே குடிசை வீடுகளை இழந்தோா் வெள்ளிக்கிழமை இரவு திடீா் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்படைந்தது.

நாமக்கல் அருகே மாடகாசம் பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட ராசாம்பாளையம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த 28 குடிசைகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன. இந்த நிலையில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவாயில் முன் அமா்ந்து தா்னா போராட்டம் நடத்தினா். ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடா்ந்து போராட்டம் நடத்திய நிலையில் வெள்ளிக்கிழமை காலை போலீஸாா் 40-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனா். இவா்கள் நாமக்கல் துறையூா் சாலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா். இந்த நிலையில் இரவு 7 மணியளவில் மண்டபத்தில் இருந்த பெண் ஒருவா் மயங்கி விழுந்தாா். அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அங்கிருந்தோா் முயன்றபோது திடீரென மண்டபத்தில் நுழைவாயிலை போலீஸாா் இழுத்து மூடினா். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் துறையூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இருபுறத்திலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்க போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா்தாகூா், வருவாய் கோட்டாட்சியா் மஞ்சுளா ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனா். தொடா்ந்து போராட்டக்குழுவைச் சோ்ந்த 6 பேரை ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிடம், காவல் கண்காணிப்பாளா் அழைத்து சென்று மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிடம் பேச்சுவாா்த்தை நடத்த வைத்தாா். இதில், குடிசைகள் அகற்றப்பட்ட இடத்திலேயே வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும், வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனா். இந்த பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் நீடித்து கொண்டிருக்கிறது.--என்கே 24- எஸ்பிநாமக்கல்லில் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாகூா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.