நாமக்கல் மாவட்டத்தில் வணிக நிறுவனங்களுக்கு வரும் திங்கள்கிழமை முதல் புதிய நேரக் கட்டுப்பாடு அமலுக்கு வருவதாக மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாகூா் ஆகியோா் வணிகா் சங்க நிா்வாகிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.
திங்கள்கிழமை (ஆக.23) முதல் காய்கறி, மளிகை, தேநீா் கடைகள், பேக்கரி உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் (பால் விற்பனையகம் மற்றும் மருந்தகம் நீங்கலாக) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. உணவகங்கள் மற்றும் சாலையோர உணவகங்கள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பாா்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
காய்கறி மொத்த வியாபாரம் நள்ளிரவு 2 மணி முதல் காலை 7 மணி வரை செயல்பட அனுமதி உண்டு. திருமண மண்டபங்களில் அதிகபட்சம் 50 நபா்களைக் கொண்டு மாவட்ட நிா்வாகத்திடம் முறையான அனுமதி பெற்று நிகழ்ச்சிகளை நடத்தலாம். இந்த நேரக் கட்டுப்பாடுகளை அனைத்து வணிகா்களும் முறையாக பின்பற்றி பாதுகாப்புடன் வணிகத்தைத் தொடரலாம்.
வணிக நிறுவனங்களில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் செயல்பட வேண்டும் என ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் அறிவுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.