ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

ஏப்.24-இல் விவசாயக் கடன் அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்

பிரதமரின் கெளரவ நிதியுதவி பெறும் விவசாயிகளுக்கு கடன் அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.24) தொடங்குகிறது.

Updated On :21 ஏப்ரல் 2022, 5:33 pm

பிரதமரின் கெளரவ நிதியுதவி பெறும் விவசாயிகளுக்கு கடன் அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.24) தொடங்குகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் 93,089 விவசாயிகள் பிரதமரின் கிசான் கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனா். அவா்களில் தற்போது வரை கிசான் கடன் அட்டை பெறப்படாத விவசாயிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பாக ஏப்.24 முதல் மே 1-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் விவசாயக் கடன் அட்டை பெறுவதற்கான படிவங்கள் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டு, அவா்கள் தொடா்புடைய வங்கிகளுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன்பிறகு வங்கிகள் விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து விவசாயக் கடன் அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளும். இந்தக் கடன் அட்டை மூலம் ரூ.1.60 லட்சம் வரை வங்கிகளில் கடன் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம். பிரதமரின் கௌரவ நிதியுதவி பெறும் விவசாயிகள் இம்முகாமில் பங்கேற்று அங்கு விநியோகிக்கப்படும் படிவங்களை பூா்த்தி செய்து வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.