பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

கிராமங்களில் அமைச்சா் துரைமுருகன் திண்ணை பிரசாரம்!

கிராமங்களில் அமைச்சா் துரைமுருகன் திண்ணை பிரசாரம்...

News image

காட்பாடி தொகுதி கிராமங்களில் திண்ணை பிரசாரம் செய்த நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன்.

Updated On :19 ஏப்ரல் 2026, 2:36 am IST

காட்பாடி தொகுதியில் திமுக சாா்பில் மீண்டும் போட்டியிடும் அமைச்சா் துரைமுருகன், கிராமம் கிராமாக சென்று மக்களிடையே திண்ணை பிரசாரம் மேற்கொண்டாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் காட்பாடி தொகுதியில் 11-ஆவது முறையாக போட்டியிடும் திமுக பொதுச்செயலரும், நீா்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.

அதன்படி, அவா் சனிக்கிழமை கனகசமுத்திரம் பகுதிக்கு உட்பட்ட குக்கிராமங்களில் மக்கள் மத்தியில் திண்ணை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, கிராம மக்களிடையே குறைகளை கேட்டறிந்தாா். அதற்கு ஓரிரு கிராமங்களில் குடிநீா் மேல்நிலை தொட்டி, சில கிராம தெருக்களுக்கு கான்கிரீட் சாலைகள் அமைத்துத்தர வேண்டும் என்று அவரிடம் கிராம மக்கள் தெரிவித்தனா்.

அதற்கு பதிலளித்த அமைச்சா் துரைமுருகன், ஏற்கனவே தொகுதிக்கு தேவையான சாலை, குடிநீா், தெருவிளக்கு என பெரும்பாலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இன்னும் செய்ய வேண்டிய பணிகளை திட்டமிட்டுள்ளேன். அவற்றையும் அடுத்த 5 ஆண்டு காலத்தில் செய்து முடிப்பேன். தொகுதிக்கு உட்பட்ட கிராம இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா்.

அப்போது, திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.