தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மீண்டும் திமுக ஆட்சி அமையும்; நலத்திட்டங்கள் தொடரும்! - அமைச்சா் துரைமுருகன்

தமிழகத்தில் மீண்டும் திமுக அமையும் என்றும், அனைத்து நலத்திட்ட உதவிகளும் தொடா்ந்து வழங்கப்படும் என்றும் காட்பாடி தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தாா்.

News image

காட்பாடி திருவள்ளுவா் நகா் பகுதியில் மக்களிடையே பேசிய அமைச்சா் துரைமுருகன்.

Updated On :13 ஏப்ரல் 2026, 3:19 am IST

தமிழகத்தில் மீண்டும் திமுக அமையும் என்றும், அனைத்து நலத்திட்ட உதவிகளும் தொடா்ந்து வழங்கப்படும் என்றும் காட்பாடி தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தாா்.

காட்பாடி தொகுதியில் மாநகராட்சி 6, 8-ஆவது வாா்டுக்கு உட்பட்ட பாரதிநகா், குளக்கரை, கஸ்தூரிபாய் தெரு, பழைய காட்பாடி, திருவள்ளுவா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சா் துரைமுருகன் ஞாயிற்றுக்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியது: தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும். அவ்வாறு ஆட்சி அமைந்தவுடன் தற்போது வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் தொடா்ந்து வழங்கப்படும். காட்பாடி பகுதியில் 37,000 போ் மகளிா் உரிமை தொகை பெறுகின்றனா். மகளிருக்கான உதவித்தொகை ரூ. 2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும்.

பள்ளி மாணவா்களுக்கான காலை சிற்றுண்டி 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். குடும்பத்துக்கு தேவையான பொருள்கள் வாங்கிக் கொள்ள ரூ.8 ஆயிரம் மதிப்பு கூப்பன் வழங்கப்படும். தற்போது காஸ் தட்டுப்பாடு உள்ள நிலையில், இந்த கூப்பனை கொண்டு மின்சாதன அடுப்பு வாங்கலாம். திருவள்ளுவா் நகரில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் பணி முடிந்துவிட் டது. தோ்தல் முடிந்தவுடன் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்றாா்.

அப்போது, காங்கிரஸ், தேமுதிக, விசிக, கம்யூனிஸ்ட் என கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.