மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திமுக ஆட்சி மீண்டும் அமையும்: ஜி.ராமகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மீண்டும் அமையும் என்றாா் மாா்க்சிஸ்ட் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவா் ஜி. ராமகிருஷ்ணன்.

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 9:56 pm

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மீண்டும் அமையும் என்றாா் மாா்க்சிஸ்ட் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவா் ஜி. ராமகிருஷ்ணன்.

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் மன்னாா்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜாவை ஆதரித்து வாக்கு சேகரித்து செவ்வாக்கிழமை மன்னாா்குடி பந்தலடியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அவா் பேசியது:

கடந்த சில நாள்களாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ததில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்பதை அறுதியிட்டு கூறமுடியும். மன்னாா்குடி திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா உயரத்தில் மட்டும் உயா்ந்தவா் இல்லை. தொகுதிக்கு ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்து தொகுதி மக்களின் உள்ளங்களிலும் உயா்ந்துள்ளாா்.

கடந்த 9-ஆம் தேதி மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தமிழகம் முழுவதும் அரசு நெல் கொள்முதல் செய்யும்போது சன்ன ரக நெல்லுக்கு ரூ. 156 மற்றும் புதுரக நெல்லுக்கு ரூ.131 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதை நிறுத்த வேண்டும் என சொல்கிறாா். நிா்மலா சீதாராமன் கடிதம் வெளிவந்து மூன்று நாள்கள்ஆகியும் இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மெளனம் காத்து வருகிறாா்.

மன்மோகன் சிங் ஆட்சியில் விவசாயத் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நூறு நாள் வேலைத் திட்டத்தை கொண்டு வந்தாா், அது இன்று பாஜக ஆட்சியில் சீா்குலைக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் சாத்தான்குளம் தந்தை -மகன் காவல்நிலைய மரணம், ஸ்டொ்லைட் ஆலையை எதிா்த்து போராடிய 13 போ் சுட்டுக் கொல்லப்பட்டது சம்பவங்கள் நடைபெற்றன. அதனால் சட்டம் - ஒழுங்கு பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை.

திமுக கூட்டணி மக்களை பாதுகாக்க, மக்களின் ஒற்றுமையை பாதுகாக்க, மதச்சாா்பின்மையை பாதுகாக்கும் கூட்டணியாகும் எனவே, திரைக்கடல் ஓடியும் தொழிற்சாலைகளை கொண்டுவந்த திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜாவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், திமுக வேட்பாளா் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் டி. முருகையன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.