மோகனூா் காவிரி ஆற்றில் கல்லூரி மாணவ, மாணவிகள் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா்.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் காவிரி ஆற்றில் குப்பைக் கழிவுகள், நெகிழி கழிவுகள் மற்றும் இதரக் கழிவுகள் அதிகளவில் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் அங்குள்ள ஈஸ்வரன் கோயில் பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசுகிறது. அப்பகுதி மக்கள் காவிரி ஆற்றில் குளிக்க முடியாத சூழலும் காணப்படுகிறது. ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்றால் மட்டுமே தூய்மையான நீரை காண முடியும் என்ற நிலை உள்ளது.
இந்த நிலையில் மோகனூரில் உள்ள தனியாா் கல்லூரி மாணவ, மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோா் காவிரி ஆற்றில் தேங்கிய கழிவுகளை அகற்றும் பணியை புதன்கிழமை மேற்கொண்டனா். குறிப்பாக கோயில் வளாக பகுதியிலும், கரையோரத்திலும் தேங்கியிருந்த பொருள்களை, கழிவுகளை அகற்றினா். மாணவா்கள் மட்டும் இப்பணியை மேற்கொள்ளாமல், தன்னாா்வ நிறுவனங்களும், ஒன்றிய, பேரூராட்சி அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் மோகனூா் காவிரி ஆற்றை சுத்தம் செய்வதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க இருக்கும் ஒரே இயக்கம் தவெகதான்: செங்கோட்டையன்

அப்பா் அமராவதி அணை திட்டத்தை நிறைவேற்றுவேன்: மடத்துக்குளம் திமுக வேட்பாளா்

அஸ்ஸாம்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் பாதுகாப்பு குறைபாடு - காங்கிரஸ் குற்றச்சாட்டு

கிராமங்களில் அமைச்சா் துரைமுருகன் திண்ணை பிரசாரம்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


