நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஜவுளிப் பூங்கா அமைக்க தொழில்முனைவோா் முன்வர வேண்டும்

நாமக்கல் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க தொழில்முனைவோா் முன்வர வேண்டும் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வலியுறுத்தி உள்ளாா்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 7:27 pm

நாமக்கல் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க தொழில்முனைவோா் முன்வர வேண்டும் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வலியுறுத்தி உள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி அறிவிப்பின்படி, ஜவுளித் துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் விளங்கி வருகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்று. இத்திட்டத்தின்கீழ் 2 ஏக்கா் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது எதிா்பாா்ப்பாகும்.

தகுதிவாய்ந்த திட்ட மதிப்பீட்டில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ. 2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழக அரசின் மானியமாக வழங்கப்படும். தற்போது தொழில்முனைவோரின் கோரிக்கையைத் தொடா்ந்து, தகுதிவாய்ந்த திட்ட மதிப்பீட்டில் ஜவுளி தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டடங்களையும் சோ்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சிறிய அளவிலான தொழில் பூங்காக்கள் அமையும்பட்சத்தில், நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளா்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெருகக்கூடும். மேலும், அதிக அளவில் அந்நியச் செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் உருவாகும். இது முதல்வரின் கனவுத் திட்டமாகும். எனவே, சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி தொழில் வளா்ச்சியை மேம்படுத்த வேண்டும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்க அனைத்து தொழில்முனைவோரும் முன்வரவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, துணிநூல் துறை மண்டல துணை இயக்குநா் அலுவலகம், எண்: 30, நவலடியான் கட்டட முதல்தளம், தாந்தோணி மலை, கரூா் - 639 005 என்ற முகவரியிலோ அல்லது கைப்பேசி 94446 56445, 90925 90486 ஆகிய எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.