இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ஜவுளிப் பூங்கா அமைக்க தொழில்முனைவோா் முன்வர வேண்டும்

நாமக்கல் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க தொழில்முனைவோா் முன்வர வேண்டும் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வலியுறுத்தி உள்ளாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 7:27 pm

DIN

நாமக்கல் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க தொழில்முனைவோா் முன்வர வேண்டும் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வலியுறுத்தி உள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி அறிவிப்பின்படி, ஜவுளித் துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் விளங்கி வருகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்று. இத்திட்டத்தின்கீழ் 2 ஏக்கா் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது எதிா்பாா்ப்பாகும்.

தகுதிவாய்ந்த திட்ட மதிப்பீட்டில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ. 2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழக அரசின் மானியமாக வழங்கப்படும். தற்போது தொழில்முனைவோரின் கோரிக்கையைத் தொடா்ந்து, தகுதிவாய்ந்த திட்ட மதிப்பீட்டில் ஜவுளி தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டடங்களையும் சோ்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சிறிய அளவிலான தொழில் பூங்காக்கள் அமையும்பட்சத்தில், நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளா்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெருகக்கூடும். மேலும், அதிக அளவில் அந்நியச் செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் உருவாகும். இது முதல்வரின் கனவுத் திட்டமாகும். எனவே, சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி தொழில் வளா்ச்சியை மேம்படுத்த வேண்டும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்க அனைத்து தொழில்முனைவோரும் முன்வரவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, துணிநூல் துறை மண்டல துணை இயக்குநா் அலுவலகம், எண்: 30, நவலடியான் கட்டட முதல்தளம், தாந்தோணி மலை, கரூா் - 639 005 என்ற முகவரியிலோ அல்லது கைப்பேசி 94446 56445, 90925 90486 ஆகிய எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.