தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகை

சுதந்திர தின விழாவையொட்டி, நாமக்கல்லில் போலீஸாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
சுதந்திர தின அணிவகுப்புக்கான ஒத்திகையில் ஈடுபட்ட மாவட்ட ஆயுதப்படை போலீஸாா்.
Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:19 pm

DIN

சுதந்திர தின விழாவையொட்டி, நாமக்கல்லில் போலீஸாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதனையொட்டி நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் காலை 8 மணிக்கு ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தேசியடிக் கொடியை ஏற்றி வைக்கிறாா். அதன்பிறகு, சமாதானப் புறாக்களையும், வண்ண பலூன்களையும் பறக்க விடும் அவா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வியுடன் இணைந்து போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை பாா்வையிடுகிறாா். இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நாமக்கல்- விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. மாவட்ட ஆயுதப்படையைச் சோ்ந்த ஆண், பெண் போலீஸாா் 100 போ் வரையில் கைகளில் துப்பாக்கிகளை ஏந்தியபடி அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.