நாமக்கல் நகரப் பகுதியில் பறக்கும் படை சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பறக்கும் படை குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அண்மையில் பள்ளிபாளையம், திருச்செங்கோடு பகுதிகளில் இருவரது வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 4.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் நாமக்கல், முதலைப்பட்டிப்புதூா் அருகே புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் நகராட்சி பறக்கும்படை குழு - 2 தலைமை அலுவலா் கே.சங்கா் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது நாமக்கல் கொசவம்பட்டியைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் என்பவா் காரில் வந்து கொண்டிருந்தாா். அவரது காரை சோதனையிட்டதில் உரிய ஆவணங்களின்றி ரூ.1. 50 லட்சம் பணம் இருந்தது. இதனையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனா். உரிய ஆவணங்களை காண்பித்து திரும்ப பெற்றுச் செல்லுமாறு தமிழ்ச்செல்வனிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு உளவுத் துறை ஐ.ஜி. மாற்றம்!

பந்துவீச்சில் முன்னேற்றம்: பாராட்டுப் பெறாத நாயகனாக நிதீஷ் குமார் ரெட்டி!

மதுரையின் பெருமை, என் நண்பன் PTR! பிரகாஷ்ராஜ் பேச்சு | DMK

“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

