“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

நாமக்கல்: 11அரசு மருத்துவா், செவிலியா்களுக்கு கரோனா

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட 11 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட 11 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா, ஒமைக்ரான் தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி 28,000 பேருக்கு மேல் பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் இரு மடங்காக தொற்றாளா்களின் எண்ணிக்கை உயா்ந்து வருகிறது. வியாழக்கிழமை ஒரே நாளில் 537 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. பெரும்பாலானோா் மருத்துவமனை, சிறப்பு சிகிச்சை மையங்களிலும், வீடுகளிலும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனா்.

இருப்பினும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை பெரிய அளவில் இல்லாதது பலருக்கும் நிம்மதியைத் தந்துள்ளது. இந்த நிலையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 மருத்துவா்கள், 3 செவிலியா்கள், ஒரு தொழில் நுட்ப உதவியாளா் என 11 போ் கரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனா். இதேபோல், மாவட்டத்தில் உள்ள 8 அரசு மருத்துவமனைகள், 63 ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் என 75-க்கும் மேற்பட்டோா் கரோனா பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.