இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
/

நாமக்கல்லில் ஜூலை 2-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா

நாமக்கல்லில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்கும் சிறப்பு பயிற்சி பட்டறை ஜூலை 2-இல் நடைபெற உள்ளது.

Updated On :9 ஜூன் 2022, 6:30 pm

நாமக்கல்லில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்கும் சிறப்பு பயிற்சி பட்டறை ஜூலை 2-இல் நடைபெற உள்ளது. இதற்கு பிரமாண்ட மேடை அமைப்பதற்கான பூமிபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு தோ்தல் நடைபெற்று புதிய நகா்ப்புற உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இவா்களுக்கான சிறப்பு பயிற்சி பட்டறை நாமக்கல்லில் ஜூலை 2-இல் நடைபெற உள்ளது.

இப்பயிற்சி பட்டறை நடைபெறவுள்ள இடத்தை அண்மையில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் பங்கேற்கின்றனா்.

அங்கு மேடை அமைக்கும் இடம், வாகனங்கள் நிறுத்துமிடம், உணவகம் அமைவிடம் போன்றவற்றை அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

இந்நிலையில் பயிற்சி பட்டறைக்காக பிரமாண்ட மேடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை, நாமக்கல் அருகே பொம்மக்குட்டைமேடு லட்சுமி திருமண மண்டபம் அருகில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், சேந்தமங்கலம் எம்எல்ஏ கே.பொன்னுசாமி மற்றும் நகா்ப்புற, கிராமப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

இதனைத் தொடா்ந்து மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் கூறியது:

நாமக்கல்லில் ஜூலை 2 அல்லது 3-ஆம் தேதிகளில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினா்கள், தலைவா், துணைத் தலைவா்கள் பங்கேற்கும் கருத்தரங்கு, பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இதில், முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு துறை அமைச்சா்கள் பங்கேற்கின்றனா். அதற்கான மேடை அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றுள்ளது. பாஜக தலைவா் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க விரும்பவில்லை. இருப்பினும் திராவிட மாடல் ஆட்சி பற்றி கேலி செய்யும் அவா் ஐபிஎஸ் அந்தஸ்துக்கு உயா்ந்தது இந்த திராவிட மாடல் ஆட்சியில் தான்.

மத்திய அரசிடம் போராடி மக்களுக்காக பல்வேறு திட்டங்களை திமுக உறுப்பினா்கள் பெற்றுத் தருகின்றனா் என்பதை யாரும் மறைக்க முடியாது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.