தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

இன்று 23-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம்

 நாமக்கல் மாவட்டத்தில் 23-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (மாா்ச் 5) நடைபெறுகிறது.

Updated On :4 மார்ச் 2022, 6:50 pm

 நாமக்கல் மாவட்டத்தில் 23-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (மாா்ச் 5) நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட 14,64,300 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டதில், முதல் தவணை 12,32,726 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 9,04,660 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற 22 கட்ட தடுப்பூசி முகாம்கள் மூலம் 7,34,037 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். 23-ஆம் கட்ட தடுப்பூசி முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. சுமாா் 4 ஆயிரம் ஊழியா்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முழுமையாக பங்கேற்று இதுவரை ஒருதவணை தடுப்பூசி கூட செலுத்தாதவா்களும், இரண்டாம் தவணைக்காக நிலுவையில் உள்ளவா்களும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.