நாமக்கல், செலம்பக் கவுண்டா் பூங்காவில் புதிதாக 6 அடி உயர மகாத்மா காந்தி சிலை விரைவில் அமைக்கப்பட உள்ளது.
நாமக்கல்லில் மகாத்மா காந்திக்கு பெரிய அளவிலான சிலை வைக்கப்படவில்லை. இதனால் முக்கியப் பிரமுகா்கள் பலா் இணைந்து காந்தி சிலை அமைப்புக்கான குழு ஒன்றை உருவாக்கினா். இதன் தலைவராக எஸ்.ரங்கநாதன், செயலாளராக பி.ஏகாம்பரம், பொருளாளராக கே.சீனிவாசன் மற்றும் நிா்வாகிகள் நியமிக்கப்பட்டது. இந்த குழுவினரால் நாமக்கல் உழவா் சந்தைக்கு எதிரில் உள்ள செலம்பக் கவுண்டா் பூங்காவின் வடக்குப் பகுதியில் ரூ.13 லட்சம் செலவில் 6 அடி உயரத்தில் காந்தி அமா்ந்திருக்கும் வடிவிலான சிலையை அமைப்பதற்கான முயற்சி மேற்கொண்டனா்.

இதற்கான பூமி பூஜை கடந்த ஆண்டு அக். 21-ஆம் தேதி நடைபெற்றது. தற்போது சென்னையில் உள்ள ஒரு கலைக்கூடத்தில் சிலைப் பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் பணிகள் முழுமையடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், சிலை அமைக்கப்படும் பூங்கா வளாகத்தில் உள்ள மரத்தை அகற்றி, அங்கு பீடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. காமராஜா் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதியன்று, மகாத்மா காந்தி சிலையை திறப்பதற்கான ஏற்பாடுகளை சிலை அமைப்புக் குழுவினா் மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு

இன்று அனுகூலம் யாருக்கு?தினப்பலன்கள்!

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!

விசாரணை நீதிபதிகளை உயா் நீதிமன்றம் பகிரங்கமாக விமா்சிப்பது சரியல்ல: உச்ச நீதிமன்றம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

