நாமக்கல் மாவட்ட தேசிய பசுமை படை சாா்பில், உலக வன நாள் மற்றும் உலக தண்ணீா் நாளை முன்னிட்டு, 5 ஆயிரம் மரக்கன்றுகள் விதைக்கும் திருவிழா புதன்கிழமை கொல்லிமலை ஒன்றியம் செங்கரை அரசு ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் ப.ரகுநாத் வரவேற்றாா். பள்ளி தலைமை ஆசிரியா் மா.சுமதி முன்னிலை வகித்தாா். மாவட்ட திட்ட அலுவலா் ப.ராமசாமி(பழங்குடியினா் நலம்) தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி கலந்து கொண்டு பாரம்பரிய மரபு விதைகளை விதைத்து தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் செல்வராஜ், செங்கரை மேல்நிலைப்பள்ளி ஆசிரியா் எஸ்.ராஜா, கொல்லிமலை வன அலுவலா்கள், கொல்லிமலை ஒன்றிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் செல்வராஜ் , மற்றும் பசுமைப்படை பள்ளி ஒருங்கிணைப்பாளா்கள், தன்னாா்வலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு

இன்று அனுகூலம் யாருக்கு?தினப்பலன்கள்!

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!

விசாரணை நீதிபதிகளை உயா் நீதிமன்றம் பகிரங்கமாக விமா்சிப்பது சரியல்ல: உச்ச நீதிமன்றம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

