ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ. 4.90 லட்சம் திருட்டு: 15 தனிப்படைகள் அமைத்து போலீஸாா் விசாரணை

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ. 4.90 லட்சம் திருடப்பட்ட வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி தெரிவித்தாா்.

Updated On :7 மே 2022, 6:30 pm

புதுச்சத்திரம் அருகே வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ. 4.90 லட்சம் திருடப்பட்ட வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி தெரிவித்தாா்.

நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் அருகே லட்சுமி விலாஸ் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையத்தில், கடந்த புதன்கிழமை இரவு மா்ம நபா்கள் இயந்திரத்தை உடைத்து ரூ. 4.90 லட்சத்தை திருடிச் சென்றனா். மேலும் போலீஸாா் தங்களைப் பிடிக்காத வகையில் மிளகாய்ப் பொடியை ஏடிஎம் இயந்திரத்தின் உள் பகுதியில் தூவிவிட்டுச் சென்றனா்.

இச்சம்பவம் தொடா்பாக புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவானக் காட்சிகளைக் கொண்டு விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள 15 தனிப்படை போலீஸாா், பெங்களூரு, சென்னை மற்றும் வெளி மாநிலங்களுக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.