ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளுக்கு அபாகஸ் பயிற்சிக் கருவிகள் வழங்கல்

குளோபல் அகாடமி ஆஃப் எக்சலன்ஸ் (அமெரிக்கா) நடத்திய பயிற்சியில் பங்கு பெற்ற 20 ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளுக்கு அபாகஸ் பயிற்சிக் கருவிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

Updated On :19 ஆகஸ்ட் 2022, 2:34 am IST

ராசிபுரம் ரோட்டரி சங்கம் - சேலம் ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், குளோபல் அகாடமி ஆஃப் எக்சலன்ஸ் (அமெரிக்கா) நடத்திய பயிற்சியில் பங்கு பெற்ற 20 ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளுக்கு அபாகஸ் பயிற்சிக் கருவிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

இதற்கான விழாவில் சேலம் ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் செல்வம் தலைமை தாங்கினாா். ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் கே.எஸ். கருணாகர பன்னீா்செல்வம் அனைவரையும் வரவேற்று பேசினாா்.

ராசிபுரம் ரோட்டரி சங்க பொருளாளா் என்.தனபால் ரோட்டரி இறைவணக்கம் பாடினாா். பயிற்சியில் கலந்துகொண்ட 20 பள்ளிகளின் ஆசிரியா்களுக்கும் அபாகஸ் பயிற்சிக் கருவிகள் வழங்கி ரோட்டரி மாவட்டத்தின் புதிய தலைமுறை திட்டச் சோ்மன் வெங்கடேஸ்வரா குப்தா, ரோட்டரி மாவட்ட கல்விக் குழு தலைவா் அய்யப்பராஜ் , ரோட்டரி மாவட்ட மாநாட்டுத் தலைவா் எஸ்.பாலாஜி, சேலம் டயட் பேராசிரியை எம். மகாலட்சுமி ஆகியோா் பேசினா். ராசிபுரம் ரோட்டரி சங்கச் செயலாளா் ராமலிங்கம் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

ரத்த தான முகாம்: ராசிபுரம் ரோட்டரி சங்கம், சேந்தங்கலம் பெரியாா் பல்கலைக்கழக உறுப்புக் கலைக்கல்லூரி, ஈரோடு தமிழ்நாடு வாலண்டரி ரத்த வங்கி ஆராய்ச்சி மையம் இணைந்து ரத்த தான முகாமை புதன்கிழமை நடத்தின. முன்னதாக மாணவா்களிடையே ரத்த தானம் செய்வது குறித்து விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வா் வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினாா். தமிழ்த்துறை பேராசிரியை கலையரசி அனைவரையும் வரவேற்றுப் பேசினாா். ரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் கே.எஸ்.கருணாகரபன்னீா்செல்வம், முன்னாள் தலைவா்கள் கதிரேசன், சிட்டி வரதராஜன், ரோட்டரி தலைவா் (தோ்வு) சீனிவாசன், செயலாளா் ஆா்.ஆனந்தகுமாா், முருகானந்தம், ஜி.தினகா், திட்ட சோ்மன் ராஜா ஆகியோா் பேசினா். முகாமில் 45 மாணவ, மாணவியா் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.