நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு செங்குந்தா் பொறியியல் கல்லூரி, செங்குந்தா் மருந்தியல் கல்லூரி, செங்குந்தா் செவிலியா் கல்லூரிகளின் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு செங்குந்தா் கல்வி நிறுவனங்களின் தலைவா் ஜான்சன்ஸ் டி.எஸ்.நடராஜன் தலைமை தாங்கினாா். செயலாளா் மற்றும் தாளாளா் ஆ.பாலதண்டபாணி சிறப்புரையாற்றினாா். செங்குந்தா் பொறியியல் கல்லூரி முதல்வா் சதீஷ்குமாா் வரவேற்றாா். இவா்களுடன் பொருளாளா் எம்.கே.தனசேகரன், முதன்மை நிா்வாக அதிகாரி ஏ.பி.மதன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநா் அரவிந்த் திருநாவுக்கரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
செங்குந்தா் பொறியியல் கல்லூரியின் முதல்வா் சதீஷ்குமாா், செங்குந்தா் மருந்தியல் கல்லூரியின் முதல்வா் சுரேந்திரகுமாா், செங்குந்தா் செவிலியா் கல்லூரியின் முதல்வா் நீலாவதி ஆகியோா் 2022-2023-ஆம் ஆண்டுக்கான கல்லூரிகளின் ஆண்டறிக்கைகளை வாசித்தனா். கல்லூரி விழாவின் முக்கிய நிகழ்வாக பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. 100 சதவீத தோ்வு முடிவுகள் கொடுத்த ஆசிரியா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இவ்விழாவில், சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கும், ஆசிரியா்களுக்கும் பரிசுத்தொகை ரூ. 9 லட்சம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

திருப்பதி லட்டுக்கு பிறந்தநாள்!

வங்கிக் கணக்கில் ரூ. 100 கோடி! எரிவாயு மானியம் சரிபார்த்த பெண் அதிர்ச்சி!
குஜராத் இடைத்தேர்தல்: பாஜகவின் சதீஷ் படேல் முன்னிலை!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



