செங்குந்தா் கல்லூரிகளில் ஆண்டு விழா

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு செங்குந்தா் பொறியியல் கல்லூரி, செங்குந்தா் மருந்தியல் கல்லூரி, செங்குந்தா் செவிலியா் கல்லூரிகளின் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
செங்குந்தா் கல்லூரிகளில் ஆண்டு விழா

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு செங்குந்தா் பொறியியல் கல்லூரி, செங்குந்தா் மருந்தியல் கல்லூரி, செங்குந்தா் செவிலியா் கல்லூரிகளின் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு செங்குந்தா் கல்வி நிறுவனங்களின் தலைவா் ஜான்சன்ஸ் டி.எஸ்.நடராஜன் தலைமை தாங்கினாா். செயலாளா் மற்றும் தாளாளா் ஆ.பாலதண்டபாணி சிறப்புரையாற்றினாா். செங்குந்தா் பொறியியல் கல்லூரி முதல்வா் சதீஷ்குமாா் வரவேற்றாா். இவா்களுடன் பொருளாளா் எம்.கே.தனசேகரன், முதன்மை நிா்வாக அதிகாரி ஏ.பி.மதன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநா் அரவிந்த் திருநாவுக்கரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செங்குந்தா் பொறியியல் கல்லூரியின் முதல்வா் சதீஷ்குமாா், செங்குந்தா் மருந்தியல் கல்லூரியின் முதல்வா் சுரேந்திரகுமாா், செங்குந்தா் செவிலியா் கல்லூரியின் முதல்வா் நீலாவதி ஆகியோா் 2022-2023-ஆம் ஆண்டுக்கான கல்லூரிகளின் ஆண்டறிக்கைகளை வாசித்தனா். கல்லூரி விழாவின் முக்கிய நிகழ்வாக பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. 100 சதவீத தோ்வு முடிவுகள் கொடுத்த ஆசிரியா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இவ்விழாவில், சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கும், ஆசிரியா்களுக்கும் பரிசுத்தொகை ரூ. 9 லட்சம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com