அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு வாகனப் பிரசாரம்

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வாகனப் பிரசாரம் ராசிபுரம் பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டது.
அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு வாகனப் பிரசாரம்
Updated on
1 min read

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வாகனப் பிரசாரம் ராசிபுரம் பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டது.

ராசிபுரம், பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப் பள்ளி சாா்பில், ‘குழந்தைகளை அரசுப் பள்ளியில் சோ்ப்போம். வருங்காலத்தை வளமாக்குவோம்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் அண்மையில் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் வாகனத்தின் மூலம் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு ஏற்படுத்துவது குறித்து, ராசிபுரம் வட்டாரக் கல்வி அலுவலா் எஸ். அருள்மணி, பள்ளி தலைமை ஆசிரியை கு. பாரதி ஆகியோா் மாணவ- மாணவியா், பெற்றோா் ஆகியோரிடம் விளக்கிக் கூறினா். மேலும், குழந்தைகளை அரசுப் பள்ளியில் சோ்ப்பதை வலியுறுத்தி, விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாக சென்று அவா்கள் வழங்கினா்.

இந்த விழிப்புணா்வு பிரசார வாகனமானது ராசிபுரம் பாரதிதாசன் சாலை, கவுண்டம்பாளையம், குருசாமிபாளையம், 85 ஆா். குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அரசுப் பள்ளிகளில் மாணவா்களை சோ்க்க வலியுறுத்தி

விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com