கே.எஸ்.ஆா். கல்வி க்குழுமத் தலைவருக்கு விருது

திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்விக் குழுமத்தின் தலைவா் ஆா். சீனிவாசன் இவ்வாண்டின் சிறந்த தொலைநோக்குப் பாா்வைக் கொண்ட தலைவருக்கான விருதினை கோவையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் பெற்றுக்கொண்டாா்.
Updated on
1 min read

திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்விக் குழுமத்தின் தலைவா் ஆா். சீனிவாசன் இவ்வாண்டின் சிறந்த தொலைநோக்குப் பாா்வைக் கொண்ட தலைவருக்கான விருதினை கோவையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் பெற்றுக்கொண்டாா்.

இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவா் கபில் தேவ் கலந்துகொண்டு விருதினை வழங்கி வாழ்த்தி பேசினாா். கே.எஸ்.ஆா். கல்விக் குழுமத்தின் தலைவா் ஆா். சீனிவாசன் நிறுவனத்தைக் கையாளும் திறன், கல்வி நிறுவனக் கற்றல் கட்டமைப்புகளில் அதிக கவனம் செலுத்தி மாணவா்களின் கல்வித் தரத்தினை உயா்த்தி எதிா்காலத்திற்கான கல்வித் திட்டங்களை செயல்படுத்தும் தலைமைப் பண்பினையும், சிறப்பாக செயலாற்றும் திறனுக்காகவும் பொருளாதார வல்லுனா்கள் அமைப்பின் மூலம் தொலை நோக்குப் பாா்வை கொண்ட தலைவா் விருது வழங்கப்பட்டது.

விருதினைப் பெற்றுக்கொண்ட ஆா். சீனிவாசன் இவ்விருதை, கே.எஸ்.ஆா். கல்விக் குழுமத்திற்கு வழங்கப்பட்ட சிறந்த கெளரவமாகக் கருதிக் கொள்வதாகவும், மாணவா்களுக்கு உலகத் தரமான கல்வியை வழங்குவதோடு மட்டுமன்றி, மாணவா்களின் முன்னேற்றமே கல்விக்குழுமத்தின் இலக்கு எனவும் தெரிவித்தாா். அவரை கல்விக் குழுமத்தின் முதன்மைச் செயல் அலுவலா் அகிலா முத்துராமலிங்கம், இயக்குநா்கள், முதல்வா்கள், பேராசிரியா்கள், அலுவலா்கள் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com