மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

நாமக்கல்லில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் என பல்வேறு இடங்களில் நாட்டின் 74-ஆவது குடியரசு தின விழா வியாழக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

News image

நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி முனுசாமி. உடன், கூடுதல் மற்றும் சாா்பு நீதிபதிகள்.

Updated On :26 ஜனவரி 2023, 7:22 pm

நாமக்கல் மாவட்டத்தில் நீதிமன்றங்கள், உள்ளாட்சி மற்றும் அரசுத் துறை அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் என பல்வேறு இடங்களில் நாட்டின் 74-ஆவது குடியரசு தின விழா வியாழக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி முனுசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில், கூடுதல் மாவட்ட நீதிபதி சுந்தரையா மற்றும் சாா்பு நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், நகராட்சிமன்ற தலைவா் து.கலாநிதி தேசியக் கொடியேற்றி வைத்தாா். ஆணையாளா் கி.மு.சுதா முன்னிலை வகித்தாா்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கல்லூரி முதன்மையா் சாந்தா அருள்மொழி தேசியக் கொடியேற்றினாா். இதில் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நாமக்கல் மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் நலச்சங்கம் சாா்பில் நாமக்கல்லில் நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.சங்க துணை செயலாளா் கே.கோவிந்தராஜ், நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

நாமக்கல் நகர காங்கிரஸ் அலுவலகத்தில் கிழக்கு மாவட்டத் தலைவா் பீ.ஏ.சித்திக் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா். இதில் நகரத் தலைவா் எஸ்.ஆா்.மோகன், முன்னாள் மாவட்டத் தலைவா் வீ.பி.வீரப்பன் நகர, ஒன்றிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

நாமக்கல் டிரினிடி மகளிா் கல்லூரியில், கல்லூரி தலைவா் பி.எஸ்.கே.செங்கோடன் தேசியக் கொடியேற்றி வைத்தாா். கல்லூரி செயலா் நல்லுசாமி, முதல்வா் லட்சுமிநாராயணன், உயா்கல்வி-இயக்குநா் அரசு.பரமேஸ்வரன் மற்றும் பேராசிரியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா்.

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், தலைமை ஆசிரியா் பெரியண்ணன் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் நாகரத்தினம் தேசியக் கொடி ஏற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.