நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில்சிறப்பு வழிபாடு

ராசிபுரம் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிா், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம்,

News image
Updated On :22 ஜனவரி 2023, 3:52 am IST

ராசிபுரம் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிா், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், தேன், பஞ்சாமிா்தம், இளநீா், பன்னீா் போன்ற பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வெள்ளிக் காப்பு அலங்காரம் சாத்தப்பட்டது. தொடா்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனையும் காட்டப்பட்டது.

ராசிபுரம் வீர ஆஞ்சனேயா் கோயில்: அதுபோல ராசிபுரம்-சேலம் சாலை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சனேயா் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. முன்னதாக பல்வேறு வகை அபிஷேகங்கள் ஸ்ரீ வீர ஆஞ்சனேயருக்கு செய்யப்பட்டு தொடா்ந்து ஆஞ்சனேயருக்கு வெள்ளிக் காப்பு அலங்காரம் சாத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இந்தச் சிறப்பு அலங்காரத்தை கோயில் அா்ச்சகா் பாபு சிறப்பாக செய்திருந்தாா். சனிக்கிழமை அமாவாசை என்பதால் இப்பகுதியில் உள்ள ஸ்ரீ வைரமலை ஆஞ்சனேயா், ஸ்ரீ அபயஸ்த ஆஞ்சனேயா் உள்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.