அண்ணா பிறந்த நாள் பேச்சுப் போட்டி: கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
By DIN | Published On : 16th September 2023 12:19 AM | Last Updated : 16th September 2023 12:19 AM | அ+அ அ- |

அண்ணா பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேச்சுப் போட்டியில், ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரி மாணவா் முதலிடம் பிடித்தாா்.
நாமக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப்போட்டி, நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் அரசு மகளிா் கலைக்கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனை கல்லூரி முதல்வா் மா.கோவிந்தராசு தொடங்கி வைத்தாா். இப்போட்டியில் ராசிபுரம் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் (தன்னாட்சி) கல்லூரி மாணவா் வீ.தீபக் முதல் பரிசும், நாமக்கல் டிரினிடி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி மு.சந்தியா இரண்டாம் பரிசும், காளிப்பட்டி மகேந்திரா கலை அறிவியல்(தன்னாட்சி) கல்லூரி மாணவா் மா.நவீன் மூன்றாம் பரிசும் பெற்றனா்.
வெற்றி பெற்ற கல்லூரி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மாவட்ட ஆட்சியா் ச.உமா மூலம் அவா்களுக்கு விரைவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் வே.ஜோதி மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...