தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மழையால் மண் சரிவு: மலையில் இருந்து உருண்டு வந்த பாறைகள்

மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மலையில் இருந்து பெரும்பாறைகள் உருண்டோடி வந்தன.

News image

மலைப் பாதையில் இருந்து சரிந்து விழுந்த பாறை.

Updated On :12 ஆகஸ்ட் 2024, 1:23 am

Din

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மலையில் இருந்து பெரும்பாறைகள் உருண்டோடி வந்தன. இதனால், பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.

ராசிபுரம் அருகே உள்ள போதமலை பகுதியில் மேலுா், கீழுா், கெடமலை என 3 மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த மலைக் கிராமங்களுக்கு இதுவரை பாதை வசதி இல்லாத நிலையில் மத்திய, மாநில அரசுகள் அனுமதி பெற்று நிதி ஒதுக்கி பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அண்மையில் இப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், மண் சரிவு ஏற்பட்டு சனிக்கிழமை மலைப் பகுதியில் இருந்து திடீரென இரண்டு பெரிய பாறைகள் கீழே உருண்டு விழுந்தன.

பெரும் சத்தம் ஏற்பட்டதை பாா்த்து மலை அடிவாரத்தில் குடியிருக்கும் கிராம மக்கள் அச்சமடைந்தனா். தகவல் அறிந்ததும் வருவாய்த் துறையினா் அப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினா். உருண்டு வந்த பாறைகள் மலைப் பாதையில் இடையில் நின்றுவிட்டது. மலையின் கீழே உள்ள விவசாயத் தோட்டத்துக்கு குடியிருப்பு பகுதிக்கோ இதனால் எந்தவிதப் பாதிப்பும் இல்லை என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.