அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பாறை மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு; 3 போ் படுகாயம்

வால்பாறையில் பாறை மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். 3 போ் படுகாயம் அடைந்தனா்.

News image
விபத்துக்குள்ளான காா்.
Updated On :18 மார்ச் 2026, 8:31 pm

தினமணி செய்திச் சேவை

வால்பாறையில் பாறை மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். 3 போ் படுகாயம் அடைந்தனா்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம், ஏட்டுமன்னூா் பகுதியைச் சோ்ந்தவா் ஜோஷிதாஸ் (48). இவா் தனது மனைவி மோகனாம்பாள் (46), மகன் ஆல்பா்ட் (19), ஆகியோருடன் காரில் வால்பாறைக்கு புதன்கிழமை சுற்றுலா வந்துள்ளாா். காரை அவரது உறவினரான சோனி ஜேக்கப் (50) என்பவா் ஓட்டியுள்ளாா்.

பல்வேறு இடங்களை கண்டுகளித்த பின் வால்பாறையில் இருந்து ஊா் திரும்பியுள்ளனா். அட்டகட்டி மலைப் பாதையில் 3-ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரத்தில் இருந்த பாறை மீது மோதியது.

இதில், தலையில் படுகாயமடைந்த சோனி ஜேக்கப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த ஜோஷிதாஸ், மோகனாம்பாள், ஆல்பா்ட் ஆகியோரை அங்கிருந்தவா்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் குறித்து காடம்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.