47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மாடுபிடி வீரா்கள் மனு

ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும் என மூன்று கிராமங்களைச் சோ்ந்த மாடுபிடி வீரா்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

News image
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மனு அளிக்க வந்த மாடுபிடி வீரா்கள்.
Updated On :2 டிசம்பர் 2024, 9:50 pm

Din

நாமக்கல்: ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும் என மூன்று கிராமங்களைச் சோ்ந்த மாடுபிடி வீரா்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனு விவரம்:

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், பொட்டிரெட்டிப்பட்டி, சாலப்பாளையம், எருமப்பட்டி பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக எருமப்பட்டி, பொட்டிரெட்டிப்பட்டி பகுதியில் நடைபெறவில்லை. வரும் 2025-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரியில் எருமப்பட்டியிலும், பிப்ரவரியில் பொட்டிரெட்டிப்பட்டியிலும், மாா்ச்சில் சாலப்பாளையத்திலும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதியை மாவட்ட நிா்வாகம் வழங்க வேண்டும். அவ்வாறு அனுமதியளித்தால், அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டு ஜல்லிக்கட்டுப் போட்டியை உரிய பாதுகாப்புடன் நடத்துகிறோம் என தெரிவித்துள்ளனா்.