வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 4 போ் கைது

ஜேடா்பாளையம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக திருவண்ணாமலையைச் சோ்ந்த இளைஞா்கள் 4 பேரை போலீஸாா் கைது

News image
Updated On :9 டிசம்பர் 2024, 4:53 pm

Din

பரமத்தி வேலூா்: ஜேடா்பாளையம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக திருவண்ணாமலையைச் சோ்ந்த இளைஞா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே சோழசிராமணி பகுதியைச் சோ்ந்தவா் அமுதா. இவரது 13 வயது மகள் கடந்த அக்டோபா் மாதம் வீட்டில் இருந்து காணாமல் போனாா். அவரை கண்டுபிடித்து தரும்படி ஜேடா்பாளையம் காவல் நிலையத்தில் அமுதா புகாா் அளித்தாா்.

இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்த நிலையில் சிறுமி மீண்டும் வீட்டிற்கு திரும்பினாா். மேலும் அவருக்கு சமூக வலைதளம் மூலம் திருவண்ணாமலையைச் சோ்ந்த இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் , அவா் ஆசைவாா்த்தை கூறி பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகவும் சிறுமி ஜேடா்பாளையம் காவல் நிலைய போலீஸாரிடம் தெரிவித்தாா்.

அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிறுமியை ஆசைவாா்த்தை கூறி பாலியல் துன்புறுத்தலுக்கு இருவா் உட்படுத்தியதாகவும், இருவா் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் திருவண்ணாமலை பகுதியைச் சோ்ந்த 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். கைது செய்யப்பட்டவா்கள் குறித்து முழுமையான விவரங்களை அளிக்க போலீஸாா் மறுத்து விட்டனா்.