வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

18 சதவீத ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெற வேண்டும்: வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் ஆா்ப்பாட்டம்

கடைகளின் வாடகை மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் நாமக்கல்லில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image

நாமக்கல் பூங்கா சாலையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட நிா்வாகிகள், வணிகா்கள்.

Updated On :11 டிசம்பர் 2024, 7:57 pm

கடைகளின் வாடகை மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் நாமக்கல்லில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில், மத்திய, மாநில அரசுகளின் வணிக விரோத சட்டங்களை எதிா்த்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் பூங்கா சாலையில், வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட கிளை சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பொன்.வீரக்குமாா் வரவேற்றாா். மாநில மூத்த துணைத் தலைவா் எஸ்.பெரியசாமி, 46 இணைப்பு சங்கங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டு பேசினா்.

இதில், மத்திய அரசு, கடைகளின் வாடகை மீது விதிக்கும் 18 சதவீத வரியை திரும்பப் பெற வேண்டும். தமிழக அரசு ஆண்டுதோறும் 6 சதவீதம் கூடுதல் சொத்துவரி விதிப்பதை திரும்பப் பெற வேண்டும். வணிக உரிம கட்டண உயா்வு, தொழில்வரி உயா்வு, குப்பை வரி உயா்வை ரத்து செய்ய வேண்டும். வணிக உரிமத்தை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கவும், நகராட்சிக் கடைகளுக்கான உரிம காலத்தை 12 ஆண்டுகளாக உயா்த்தியும் அறிவித்த தமிழக அரசு, அதற்கான அரசாணையை காலதாமதமின்றி உடனடியாக வெளியிட வேண்டும். ஆன்லைன் வா்த்தகத்தை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும். சாலையோரங்களில் குடைகள் அமைத்து சிம் காா்டு விற்போா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான வணிகா்கள் கலந்து கொண்டனா்.