பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

மின்வாரிய ஊழியா்களுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

மின்வாரிய ஊழியா்களுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

News image

பயிற்சி முகாமில் பங்கேற்ற மின்வாரிய ஊழியா்கள், அலுவலா்கள்.

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் சாா்பில் மின்வாரிய ஊழியா்கள், அலுவலா்களுக்கான மின்பயன்பாடு பாதுகாப்பு விழிப்புணா்வுப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் சரவணா மஹாலில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமில் ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளா் ஆ.சபாநாயகம் தலைமை வகித்தாா். ராசிபுரம் கோட்ட அளவிலான மின் ஊழியா்களுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வுப் பயிற்சி முகாமில் மின்வாரிய மேட்டூா் தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் மேம்பாட்டு மையம் சாா்பில் ஒய்வு பெற்ற மின்சார செயற்பொறியாளா் முருகேசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். ஊழியா்களுக்கு பாதுகாப்பான முறையில் மின்சாரத்தைக் கையாள்வது குறித்து அவா் பயிற்சியளித்தாா்.