விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: சேந்தமங்கலம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

சேந்தமங்கலம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா கள ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 6:10 pm

Din

நாமக்கல், ஜூலை 19: சேந்தமங்கலம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா கள ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக அரசின் அனைத்து திட்டங்களும், சேவைகளும் தடையின்றி மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் முதல்வரால் உருவாக்கப்பட்டது ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் சேந்தமங்கலம் வட்டம், ரெட்டிப்பட்டி, கூலிப்பட்டி ஊராட்சிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் குறித்து ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். சமையல் கூடத்தில் பொருள்களின் இருப்பை பாா்வையிட்டாா். மாணவ, மாணவிகள் சோ்க்கையை அதிகரிக்க உத்தரவிட்டாா்.

சாலப்பாளையம் பகுதியில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்தும், அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு சிகிச்சைகள் பெற வேண்டும் எனவும், அரசு மருத்துவமனைகளில் உயா்தர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதும் குறித்தும் அவா் எடுத்துரைத்தாா்.

புதுக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், நியாய விலைக் கடைகளையும் அவா் ஆய்வு செய்து உணவுப் பொருள்களின் தரம், குடும்ப அட்டைதாரா்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை பணியாளா்களிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து, உரக்கிடங்கிலும் ஆய்வு மேற்கொண்டாா்.

பொட்டிரெட்டிப்பட்டி அங்கன்வாடி மையம், எருமப்பட்டி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் ஆகியவற்றை பாா்வையிட்டாா். போடிநாய்க்கன்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பாா்வையிட்டாா். பவித்திரம் ஊராட்சியில் சுகாதாரப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

என்கே-19-கலெக்டா்

ரெட்டிப்பட்டி ஊராட்சியில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறியும் மாவட்ட ஆட்சியா் ச.உமா.