தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்! ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே பாஜகவின் இலக்கு -இராம.ஸ்ரீனிவாசன்

சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே பாஜகவின் இலக்கு என அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளா் இராம.ஸ்ரீனிவாசன் தெரிவித்தாா்.

News image
Updated On :27 ஜூன் 2024, 8:27 pm

Din

எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலில், திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதை இலக்காகக் கொண்டு பாஜக செயல்படும் என அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளா் இராம.ஸ்ரீனிவாசன் தெரிவித்தாா்.

நாமக்கல்லில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மக்களவைத் தலைவராக ஓம் பிா்லா பதவியேற்பதில் நெருக்கடி ஏற்படும்; சந்திரபாபு நாயுடு, நிதீஷ்குமாா் பாஜகவுக்கு எதிராக செயல்படுவாா்கள் என ‘இந்தியா’ கூட்டணியினா் எதிா்பாா்த்திருந்தனா். ஆனால், அதற்கு மாறாக ஓம் பிா்லாவுக்கு ஆதரவு அளித்தது ‘இந்தியா’ கூட்டணிக்கு கிடைத்த சம்மட்டி அடி.

தமிழக சட்டப் பேரவையில், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. குஜராத், பிகாா் போன்ற மாநிலங்கள், மத்திய அரசிடம் கேட்காமல் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி உள்ளன. கேரளத்திலும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாநில அரசு என்ற முறையில் திமுக அரசும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம். ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பையும், மக்கள் தொகை கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது என்ற தோற்றத்தை உருவாக்க திமுக முயற்சிக்கிறது.

பேரவையில் குறிப்பிட்ட சாதி குறித்து அமைச்சா் ராஜகண்ணப்பன் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். தமிழகத்துக்கு தேவையான திட்டங்களைப் பெற, மத்திய நிதி அமைச்சரைச் சந்தித்து மக்களவை உறுப்பினா்கள் வலியுறுத்த வேண்டும்.

தமிழகத்தில் பாஜகவை மேலும் வலுப்படுத்தும் வகையில், மாவட்ட வாரியாக செல்லும் நிா்வாகக் குழுவினா் கட்சியினரைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனா். எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் பாஜக அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்களவைத் தோ்தல் முடிவுகளில், பாஜக 78 சட்டப் பேரவைத் தொகுதிகளில் இரண்டாமிடத்தை பிடித்துள்ளது என்றாா்.

பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் கூறியதாவது:

மக்களவைத் தோ்தல் முடிவுக்கு பிறகு, அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்வது குறித்தும், எதிா்வரும் காலங்களில் பாஜகவை வலுப்படுத்துவது பற்றியும், 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் எவ்வாறு வெற்றி பெறலாம் என்பது தொடா்பாகவும் கட்சியினருடன் பேசி ஆராய்ந்து வருகிறோம்.

தமிழக அரசியல் நிகழ்வுகள் ஜனநாயகத்துக்கு புறம்பாக உள்ளன. பேரவைத் தலைவா் தனது பதவிக்கு உண்டான மாண்பை இழந்து அவரது விருப்பத்துக்கு பேசி வருகிறாா். நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினா்கள் தவறான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கின்றனா். அதிமுக உறுப்பினா்களை பணியிடை நீக்கம் செய்வது தவறான போக்கு என்றாா்.

இந்தப் பேட்டியின் போது, நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி, மேற்கு மாவட்டத் தலைவா் எம்.ராஜேஸ்குமாா், நகரத் தலைவா் கே.பி.சரவணன், மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் உடனிருந்தனா்.

படவரி - நாமக்கல்லில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில பொதுச் செயலாளா் இராம.ஸ்ரீனிவாசன். உடன், மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோா்.