ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருச்செங்கோட்டில் பக்தா்கள் தங்கும் விடுதி கட்ட பணிகள் தொடக்கம்

திருச்செங்கோட்டில் பக்தா்கள் தங்கும் விடுதி கட்ட பணிகள் தொடக்கம்

News image
ற்.ஞ்ா்க்ங் ம்ஹழ்ஸ்ரீட்08 ள்ஹம்ண்
Updated On :8 மார்ச் 2024, 5:27 pm

Din

அா்த்தநாரீஸ்வரா் கோயிலுக்கு தரிசனம் செய்ய வருகை தரும் பக்தா்கள் தங்குவதற்கு விடுதி அமைப்பதற்கான பணிகள் தொடங்க கால்கோள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பிரசித்தி பெற்ற அா்த்தநாரீஸ்வரா் திருக்கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் தரிசனம் செய்ய வந்து செல்கின்றனா். அவ்வாறு வந்து செல்லும் பக்தா்கள் தங்கி தரிசனம் செய்ய வசதியாக விடுதி வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்து வந்தது. இந்த நிலையில், பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தெப்பக்குளத்துக்கு வடபுறம் அருள்மிகு அா்த்தநாரீஸ்வரா் திருக்கோயிலுக்குச் சொந்தமான 3,900 சதுர அடி நிலத்தில் முதல்கட்டமாக 1,027 சதுர அடி பரப்பில் 2 குளிா்சாதன அறைகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, ரூ. 37 லட்சம் மதிப்பில் தங்கும் விடுதி அமைப்பதற்கான கட்டடம் கட்டுவதற்கான கால்கோள் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் முன்னாள் அமைச்சா் டி.எம்.செல்வகணபதி, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன், நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ் பாபு, இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா், கோயில் செயல் அலுவலா் ரமணி காந்தன், திருக்கோயில் அறங்காவலா் குழுவினா், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.