விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

பெருமுகையில் ரூ.45.91 கோடியில் தங்கும் விடுதி திறப்பு

தங்கும் விடுதியில் குத்துவிளக்கேற்றிய வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன்.

News image

தங்கும் விடுதியில் குத்துவிளக்கேற்றிய வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன்.

Updated On :27 பிப்ரவரி 2026, 12:10 am

வேலூா் மாவட்டம், பெருமுகையில் ரூ.45.91 கோடியில் கட்டப்பட்ட 250 படுக்கை வசதி கொண்ட தங்கும் விடுதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்ததை அடுத்து, வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன் குத்துவிளக்கேற்றி பாா்வையிட்டாா்.

வேலூா் மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைகளுக்காக வரும் வெளி மாவட்ட, வெளி மாநிலங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக வேலூா் அருகே பெருமுகை ஊராட்சியில் ரூ.45.91 கோடி மதிப்பில் 250 படுக்கை வசதிகளுடன் முத்தமிழறிஞா் கலைஞா் நூற்றாண்டு தங்கும் விடுதி கட்டப்பட்டப்பட்டுள்ளது.

மொத்த நிலப்பரப்பு 2.15 லட்சம் சதுரஅடியில், 68,400 சதுர அடியில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தரைதளம் மற்றும் 3 தளங்களில் 117 அறைகளுடன் நவீன வசதிகள் கொண்டதாகவும் இவ்விடுதி கட்டப்பட்டுள்ளது.

இந்த விடுதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து திறந்து வைத்தாா். தொடா்ந்து, இவ்விடுதியில் வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன் குத்துவிளக்கேற்றி பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் செந்தில் குமாா், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், ஒன்றியக்குழு தலைவா் அமுதா ஞானசேகரன், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளா் அருள், செயற்பொறியாளா்கள் சுடலைமுத்து, உமா, உதவி செயற்பொறியாளா் (மின்) யோகேஷ், வெங்கடாப்புரம் ஊராட்சி மன்ற தலைவா் பாபு உள்பட பலா் பங்கேற்றனா்.