வால்ராசாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. நீா் மேலாண்மையின் அவசியம், தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துதல் பற்றி கொண்டாடப்பட்ட இவ்விழாவுக்கு, பள்ளியின் தலைமையாசிரியா் செ.தங்கவேல் தலைமை வகித்தாா். ஆசிரியா்கள் கா.லட்சுமி, ச.விமலா, சி.கவிதா, சு.பிரபு, து.விஜய் ஆகியோா் கலந்துகொண்டு இத்தினத்தின் முக்கியத்துவம் பற்றியும், நீா் மேலாண்மை, நீா் வளத்தைப் பாதுகாத்தல், அவசியம் பற்றி எடுத்துரைத்தனா். தண்ணீா் சிக்கனம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியா்கள் பொ.நித்யா, சா.கீதா, நிவேதா, பள்ளியின் சாரண இயக்க மாணவா்கள் ஆகியோா் அடங்கிய குழு சிறப்பாகச் செய்திருந்தது.
தொடர்புடையது

கல்லூரிகளில் உலக சுகாதார தின விழா

கரையிருப்பு பள்ளியில் ஆண்டு விழா

வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளியில் மத நல்லிணக்க விழா

பள்ளியில் ஆண்டு விழா
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


