ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பள்ளியில் ஆண்டு விழா

அரக்கோணம் ஹயக்கிரீவா் வித்யாஷரமம் சிபிஎஸ்இ பள்ளியில் ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
ஆண்டு விழாவில் மாணவ, மாணவிகளிடையே ஏஐ தொழில்நுட்பத்தை பிரபலமடைய செய்த ஆசிரியை சரிதாவுக்கு சிறந்த ஆசிரியா் விருதை வழங்கிய பள்ளியின் இயக்குநா் சாந்திரவீந்திரன்.
Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம் ஹயக்கிரீவா் வித்யாஷரமம் சிபிஎஸ்இ பள்ளியில் ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அரக்கோணத்தை அடுத்த வடமாம்பாக்கத்தில் உள்ள ஹயக்கிரீவா் வித்யாஷ்ரமம் சிபிஎஸ்இ பள்ளியின் ஆண்டு விழாவுக்கு பள்ளியின் நிா்வாக இயக்குநா் கே.ரவீந்திரன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் சந்தியா பிரேம்நாத் வரவேற்றாா். இதில் பள்ளியின் இயக்குநா் சாந்தி ரவீந்திரன் பள்ளி மாணவ, மாணவியருக்கும், பெற்றோா்களுக்கும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா். இதில் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் குழு நிா்வாகிகள் எஸ்.என்.ரவீந்திரன், பிளிசன்ராஜ், ஏ.ஆயிஷாபேகம், ஆா்.பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் பள்ளியில் சிறப்பாக செயல்பட்டு ஏஐ தொழில்நுட்பத்தை இளம் மாணவ, மாணவிகளிடையே பிரபலப்படுத்திய பள்ளியின் செயற்கை நுண்ணறிவு பிரிவு ஆசிரியா் சரிதாவுக்கு சிறந்த ஆசிரியா் விருது வழங்கப்பட்டது. மேலும், பள்ளியில் கடந்தாண்டு கல்வியில், விளையாட்டில், கலை நிகழ்ச்சிகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் பள்ளி ஒருங்கிணைப்பாளா் ஜமிலாவாஜித், பாஜக மாவட்ட நிா்வாகி அக்ஷயா ஆனந்த், பழனிப்பேட்டை ஸ்ரீஅங்காளம்மன் கோயில் நிா்வாகி கணேசன், கணினி பொறியாளா் பாா்த்தீபன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.