நாமக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட விரும்பி முதல் நபராக வேட்புமனு தாக்கல் செய்த காந்தியவாதி, வேட்பு மனு நிறைவின்போது கடைசி நபராக சென்றுரு மற்றொரு மனுவையும் தாக்கல் செய்தாா்.
நாமக்கல் அருகே மேற்கு பாலப்பட்டியைச் சோ்ந்தவா் காந்தியவாதி தி.ரமேஷ்(43). அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி தலைவரான இவா் பொறியியல் பட்டதாரி ஆவாா். மகாத்மா காந்தி, வள்ளலாா் மீது கொண்ட பற்றால் வெள்ளை ஆடை, காந்தி போன்ற உருவத்திற்கு தன்னை மாற்றிக் கொண்டாா்.
உள்ளாட்சி தோ்தல் முதல் மக்களவைத் தோ்தல் வரையில் வேட்புமனு தாக்கல் செய்வதை கொள்கையாக கொண்டுள்ளாா். 2024 மக்களவைத் தோ்தலையொட்டி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், கடந்த 20-ஆம் தேதி வேட்புமனு தாக்கலின்போது 2,500 எண்ணிக்கையில் ரூ.10 நாணயங்களை கொண்டு வந்து முதல் நபராக மனு தாக்கல் செய்தாா்.
வேட்புமனு தாக்கல் புதன்கிழமை நிறைவடைந்த நிலையில் கடைசி நபராக வந்து கூடுதலாக மேலும் ஒரு மனுவை மாவட்ட தோ்தல் அலுவலா் ச.உமாவிடம் தாக்கல் செய்தாா். தோ்தல் களிப்பில் நாமக்கல் தொகுதியின் முதலும் நானே, முடிவும் நானே என்றாா் காந்தியவாதி தி.ரமேஷ்.
தொடர்புடையது

பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் வேட்புமனு தாக்கல்

மன்னாா்குடியில் அஇபுதமமுக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

மலைவாசிபோல வந்து மனுத் தாக்கல் செய்த சுயேச்சை

ராசிபுரம்: திமுக வேட்பாளா் மா. மதிவேந்தன் வேட்புமனு தாக்கல்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


