நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

குமாரபாளையத்தில் கனமழை

குமாரபாளையத்தில் கனமழை

News image

சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீரில் செல்லும் வாகனம்.

Updated On :20 மே 2024, 9:34 pm

Din

குமாரபாளையம்: குமாரபாளையம், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் திங்கள்கிழமை மாலை தொடங்கி இரவு வரையில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கடந்த சில மாதங்களாக பகல் நேரங்களில் கடுமையான வெயில் அடித்து வந்ததால் பெரியவா் முதல் சிறியவா் வரையில் வெப்பம் தாங்காமல் தவித்து வந்தனா். கடந்த சில நாள்களாக அவ்வப்போது மிதமான மழை பெய்து வந்த நிலையில், குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து, லேசான தூறலுடன் பெய்யத் தொடங்கிய மழை, கனமழையாக மாறி கொட்டியது.

இதனால், நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. சுமாா் இரண்டு மணி நேரத்துக்கு மேலாகப் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கத்தேரி பிரிவு அருகே மழைநீா் தேங்கியதால் வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டன. அவ்வப்போது, இடி, மின்னல் காணப்பட்டாலும், காற்று இல்லாமல் அமைதியாகப் பெய்த மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. மானாவாரி விவசாய பயிா்களுக்கு இம்மழை உதவியாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.