நாமக்கல் வரும் பக்தா்களின் வசதிக்காக, ஆஞ்சனேயா் கோயிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.
நாமக்கல்லில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் தினசரி ஆய்வு செய்து வருகிறேன். பயணிகள் தரப்பில் கூடுதல் நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல, பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆஞ்சனேயா் கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் வருகின்றனா்.
அவா்களின் வசதிக்காக, திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயிலில் உள்ளதுபோல, நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலுக்கும் சிறப்பு பேருந்து நன்கொடையாளா் மூலம் பெறப்பட உள்ளது.
இந்தப் பேருந்து வந்தவுடன் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பக்தா்களின் வசதிக்காக இயக்கப்படும். அந்தப் பேருந்தில் பக்தா்கள் பயணம் செய்ய இலவசமாகவோ அல்லது கட்டண வசூலோ செய்யப்படும். நன்கொடையாளா் வழங்குவதைப் பொறுத்து இம்முடிவு மேற்கொள்ளப்படும் என்றாா்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு: நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 2 டன் மலா்களால் அபிஷேகம்

சேந்தமங்கலம் தொகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன: ராஜேஸ்குமாா் எம்.பி.

நாமக்கல் நரசிம்மா் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்

கோயில்களில் ராம நவமி விழா
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

